Monday 14 May 2018

என் அம்மாவுக்காக......

தாய்மை என்பது....
               
 மண்ணில் குழந்தையாய்த் தவழ்ந்து, சிறுமியாய் ஓடி விளையாடி மங்கையாய் வாழ்க்கையை இரசிக்க ஆரம்பிக்கும் ஒரு பெண் தாய் என்னும் அந்த உயர்ந்த நிலையை  அடையும்போதுதான் முழுமையான ஒரு பெண்ணாக ஆகிறாள். தாய்மை என்பது அந்த இறைவனால் பெண்களுக்கே வழங்கப்பட்ட வரப்பிரசாதம் ஆகும்.
 தாய் என்பவள் ஒன்பது மாதங்கள் நம்மைக் கருவறையில் சுமந்து, நாம் உதைக்கும் வலியையும் பொறுத்துக் கொண்டு அதைச் சுகமாகக் கருதும் ஒரே உயிராகும். குழந்தை பிறந்த பிறகு, தாய் தனது இரத்தத்தையே பாலாக்கி, பாலூட்டித் தாலாட்டுவாள். தொப்புள் கொடி அறுக்கப்பட்டாலும் தாய்க்குத் தனது குழந்தை மீது உள்ள அன்பும் அக்கறையும் குறையவே குறையாது. இரவு பகல் பாராது தாய் தனது குழந்தையைக் ‘கண்ணை இமை காப்பது போல’ வளர்ப்பாள்.

 இந்த புவியில் 8.4 பில்லியன் மனிதப் புன்னகையின் யுனிவர்சல் உரிமை, ஆதிப் பெண்ணின் கருவறைக்கே சொந்தம். அவளில் இருந்து இத்தனை கோடி இன்பமாய் பெருக்கெடுத்து, கடந்த நொடி பிறந்த குழந்தை வரை மனித குலத்தைப் படைத்து அளிக்கும் தாய்மை, பெண்மையின் தனிச்சிறப்பு. ஒரு பெண், தாய் ஆக தன் உடலால், மனதால் செய்யும் தியாகங்களுக்கு இணையாக எதுவுமே இல்லை இந்தப் பிரபஞ்சத்தில்.....

 இவ்வுலகில் பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக என பல்வேறு பரிணாமங்களை வாழ்க்கையில் சந்திக்கிறாள். அவற்றில் உன்னத அந்தஸ்தை தருவது ‘தாய்’ என்ற ஸ்தானமாகும். தாய்மையை போற்றக்கூடிய வகையில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ‘அன்னையர் தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது.
     

என் தாயை பற்றி.....

தாய் என்றாலே தெய்வம் தானே...அனால் என் தாய் தெய்வத்திற்கே தெய்வமானவள் .....

அவள் பட்டினி கிடந்து நான்பல முறை பார்த்திருக்கிறேன்...என்னை ஒருநாளும் பட்டினி போட்டதில்லை...

நான் பள்ளி செல்லும் வேளையிலே தன் காதணியை விற்று எனக்கு காலனி வாங்கி கொடுத்தவள்...

கோபித்து கொண்டு சாப்பிடாமல் நான் படுத்தால்,எனை சாப்பிட வைக்க அவள் செய்யும் உத்திகளை செத்தாலும் நான் மறவேன்...


கட்டிய கணவன் உதறிவிட்டு சென்றாலும் ஊர்தேடி வயல் மிதித்து என்னை வளர்க்க நீ பட்ட கஷ்டத்தை உள்ளளவும் மறவேனே.....

திசை மாறி  சிறு வயதில் சாடையிலே அடி வாங்கி திக்கற்று நின்றவனை ,கைபிடியாய் கூட்டி வந்து காலிற்கு மருந்திட்டவளே ....

இப்படி இன்னும் எத்தனையோ......மரணம் தான் வந்தாலும் மறவேனோ உன் அன்பை...

வாய் பேச முடியாமல் ஊமையாய் இருந்தாலும் ஊரில் உள்ள வயலெல்லாம் உன் வருகை கேட்டிருக்கும்....

தினக்கூலி நீ செய்து என் திருமணத்திற்கு பணம் சேர்க்கும்  உனைப்போல ஒரு தாயை
இன்றேனும் உணர்ந்தேனே....

இதனையும் என்னக்காக செய்த உனக்கு என்ன வேண்டும் என கேட்டேன்....
''நீ நல்லா இருந்தா எனக்கு அதுவே போதும் என நீ சொன்ன'' வார்த்தையை 
வேறெந்த உறவும் பொய் கூட சொல்லலையே.....

இதெலாம் போக எனக்கு இருகிறதம்மா இனொரு ஆசை....பணம் தேடி அலையும் எனக்கு,பட்டினியே அறியாத எனக்கு  ஒரு வாய் சோறு உன் கையில்.......