Thursday 5 April 2018

மேட்டூர் அணையில் மூழ்கிய 60 ஊர்கள் பற்றி தெரியுமா?

வணக்கம் நண்பர்களே.......
                       சமீபத்தில் நமக்கு வெகுவாக தெரிந்த விடயம் காவிரி மேலாண்மை வாரியம் .....அதை பற்றிய புரிதலே நாமில் பலருக்கு இல்லை 
அனால் புரிதல் நிச்சயம் வேண்டும் .சங்க காலம் தொட்டே காவிரி தமிழகத்தில் பாயும் நதி மேடான பகுதியில் இருந்து தாழ்வான பகுதிக்கு பாயும் தன்மை கொண்டதுதான் நீரின் குணம் .காவிரியும் அப்படிதான் பாய்கிறது ,அது பாயும் வழியில் தான் தமிழகத்தின் பெரிய அணையாக திகழ்கிற மேட்டூர் அணை உள்ளது.இந்த அணை 1934 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது .

     முன்பு இந்த பகுதிகள் யாவும் [தருமபுரி தொடங்கி தஞ்சை வரை] சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்தது .பிறகு பல்வேறு மன்னர்களின் படையெடுப்பால் காலம் கடந்து சென்றது.
 உலகின் பல நாகரீகங்கள் நதிக்கரையில் உருவானது  என்று நமக்கு தெரியும்  அதேபோலத்தான் காவிரி ஆற்றங்கரையிலும் நம் முன்னோர்கள் ஆயிரமாண்டுகள் போற்றத்தக்க விதத்தில் வாழ்ந்தார்கள் ,பிறகு 

மதுரை சுல்தான் ஆட்சி (1323-1370)

விஜயநகர நேரடி ஆட்சி(1370-1529)

நாயக்கர்கள் ஆட்சி(1529-1697)

17ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் ஆட்சி

மொகலாயர் ஆட்சி (1697-1801)

ஆங்கிலேயர்கள் ஆட்சி (1801-1947 வரை நாம் கண்ட இன்னல்கள் அதிகம் 
குறிப்பாக 1801 பின் பல மாறுதல்கள் ஏற்பட்டது.
   காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் வாழ்ந்த மக்கள் வேளாண்மை மற்றும் மீன்பிடிதொழில் மூலம் செல்வசெழிப்புடன் வாழ்ந்தார்கள்... 
ஆங்கிலேயர்களின் ஆட்சியில் 1824ம் ஆண்டில் இருந்து இந்த அணையை கட்ட தீர்மானம் போடபடிருந்தது.அனால் அபோது அந்த திட்டம் சாத்தியப்படவில்லை ,ஆனாலும் தொடர்ந்து ஆங்கிலேய அதிகாரிகள் அணைக்கான ஒப்புதல் பெற முயற்சி செய்தனர்..
அதன்படி மேட்டூரில் 1924ல் இங்கிலாந்தைச் சேர்ந்த சென்னையில் வசித்து வந்த ஸ்டேன்லி என்ற பொறியாளர் மூலம் அணைகட்ட ஆரம்பிக்கப்பட்டது.
மேட்டூர் அணை கட்டும் பணியில் ஒன்பது ஆண்டுகாலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
1924-ம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்டது. அப்போது அணை நீர்த்தேக்க பகுதிகளில் சாம்பள்ளி, கோட்டையூர், பண்ணவாடி,சோழப்பாடி,காவேரிபுரம்,கோட்டையூர்,நேயம்பாடி,மல்லப்பாடி,நாகமலை,கோட்டை துறை உள்பட 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்தன. இந்த கிராமங்களில் வசித்து வந்த மக்கள் மேட்டூர் அணை கட்டுமான பணிகள் தொடங்கியதால் தங்களது வழிபாட்டு தலங்களை அப்படியே விட்டுவிட்டு வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.


மற்ற மாவட்ட மக்களும் நலம் பெற வேண்டும் என தங்களின் பூர்வீகத்தை விட்டு கையில் கிடைத்த தானியங்களையும் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வெவ்வேறு இடங்களில் குடியேறினார்கள்.
பல தலைமுறைகள் வாழ்ந்த இடத்தை விட்டு தம் குடும்பத்தை கூட்டி வேறு இடங்களில் வாழும் மக்களின் மனநிலை [எம் ஈழத்தமிழ் மக்களின் ] நிலையே ....
 இன்றும் அங்கு கிறிஸ்தவ ஆலயம், ஜலகண்டேஸ்வரர் ஆலய நந்தி சிலை ஆகியவை இருகின்றன, மேட்டூர் அணையில் 120 அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அணை நீர்மட்டம் குறையும் போதெல்லாம் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடியில் தண்ணீரில் மூழ்கி இருக்கும் கிறிஸ்தவ ஆலய கோபுரம், ஜலகண்டேஸ்வரர் ஆலய நந்தி சிலை ஆகியன வெளியே தெரிவது வழக்கம். அணை நீர்மட்டம் 79 அடியாக குறையும்போது கிறிஸ்தவ ஆலய கோபுரம் வெளியே தெரியும். நீர்மட்டம் 69 அடியாக குறையும் போது நந்தி சிலை வெளியே தெரியவரும்.
இப்படி வரலாற்றில் மறைக்கப்பட்ட[மறக்கப்பட்ட] மக்களின் வழியில் வந்த நானும் ஒருவனே ......

     வரலாறுகளை மண்மூடி மறைத்த காவிரி இன்று கோடிகணக்கானவர்களின் உயிர்நாடியாக உள்ளது பெருமை அனால் எங்கள் வாழ்வில் இன்னும் மாறாத வறுமை....


வாழ்க காவிரி ,
வளர்க எம் தமிழ்மக்கள்,....

No comments:

Post a Comment