புதன், 4 ஏப்ரல், 2018

வெள்ளியங்கிரி மலையில் வேண்டாமே குப்பை

வணக்கம் நண்பர்களே....
                                     
 7வது முறையாக இறைவனின் தரிசனத்திற்காக வெள்ளியங்கிரி சென்று வந்தோம்...
                                        கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது, வெள்ளியங்கிரி மலை. கோவை நகரிலிருந்து, 34 கி.மீ., தொலைவில் உள்ள, இந்த மலையின் அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.இங்கிருந்து ஏழு மலை களைக் கடந்து சென்றால், வெள்ளியங்கிரி மலையுச்சியில் சுயம்பு வடிவமாக வீற்றிருக்கும் ஈசனை தரிசிக்க முடியும்,இங்கு தண்ணீர் வசதி குறைவு எனவே அனைத்து பக்தர்களும் வீடுகளிலிருந்து பாட்டில்களில் தண்ணீர் எடுத்து வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; தண்ணீர் காலியான பின், பக்தர்கள் பாட்டில்களை மலைகளிலேயே ஆங்காங்கே எறிந்து விடுகின்றனர்.

இதனால், ஏழு மலைகளிலும், எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பாட்டில்களும், பிளாஸ்டிக் பாக்கெட்களுமாக பரவிக்கிடந்தன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டில், குப்பைகளின் அளவு, பல மடங்கு அதிகமாக இருக்கிறது,
            இதை பார்த்த போது சென்ற வருடம் இங்கு சேகரிக்கப்பட்ட 85 மூட்டை குப்பைகளை விட அதிகமாக இருக்கும் என நினைக்கிறன்...[அவுளவு அதிகமான குப்பை]
         இங்கு வரும் பக்தர்கள் யாவரும் கடுமையான பயணத்தில் இறைவனை காண வருகிறோம் நாம்    நினைத்து பாருங்கள் ,மற்ற நாட்களில் இங்கே உலவிதிரியும் காட்டு விலங்குகள் இந்த நெகிழிகள்,மற்றும் பளிதீன்களை உண்டால் என்னவாகும்,,,
                  மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மக்காது என்பதால் சுற்றுசூழல் அதிக அளவில் மாசடைந்து விடும் அல்லவா.?
நம்மை காக்கும் இறைவன் இருக்கும் மலையை அசுத்தம் செய்வது இறைவனையே பழிப்பதற்கு ஒப்பாகும்...
அதையும் தாண்டி பல பக்தர்கள் புகையிலை பொருட்களை(பீடி,குட்கா)வை மலையின் மீது பயன்படுத்துவதால் மலையின் புனிதம் கெடும் என்பது தெரிந்தும் செய்வது என்னவென்று சொல்வது....


இப்படியே குப்பைகள் குவிவது தொடர்ந்தால் பல்வேறு வனவிலங்குகளும், மரங்களும்,காடுகளும் இங்குள்ள ரம்மியமான காடுகளும் அழிக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம்.மலையேறும் பக்தர்கள் கொண்டு செல்லும் பொருட்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும்.சுற்று சூழல் அமைப்புகள் வெள்ளியங்கிரி மலையின் பெருமையையும் அதை பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றியும் பக்தர்களிடம் எடுத்துகூற வேண்டும் என்பதுவும் தான் இந்த மலையை காப்பாற்ற கூடிய விஷயங்கள்.

ஒரு காலத்தில் இந்த மலையை தெய்வமாக கருதி அதன் மீது கால்படக்கூடது என்று இந்த மலை இருக்கும் திசையைப்பார்த்து வணங்க மட்டுமே செய்வார்கள். மலையேற கூட மாட்டார்கள்.இன்று மலையேறி பக்தியுடன் ஒரு உன்னத சூழலை அனுபவிக்கும் பல லட்சம் பக்தர்கள் இந்த மலையை அடுத்த சந்ததியினருக்கும் சுத்தமானதாக விட்டு செல்ல வேண்டும் அல்லவா?

தென்னாடுடைய சிவனே போற்றி...
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக