புதன், 5 செப்டம்பர், 2018

மறக்க முடியாத ஆசிரியர் தினம்

கமால் ஆசிரியர்....
   யார் இந்த கமால் ஆசிரியர் என்று கேட்கிறீர்களா?
திருப்பூரின் பெரியார் காலணியில்
82 வயது ஓய்வு தலைமை ஆசிரியர்,நாங்கள் வாடகைக்கு குடிஇருக்கும் வீட்டின் முதலாளி மற்றும் நான் சந்தித்த மனிதர்களில் சற்று வேறுபட்டவர்....

 ஆனால் காலத்தின் கட்டாயம் அவர் பூத உடலை விட்டு உயிர் பிரித்தது.முதுமையின் காரணமாக அவர் எங்களை விட்டு பிரிந்தார்.
ஆசிரியர் பணியை பெருமையாகவும் உயர்வாகவும் எண்ணியவர் இந்த ஆசிரியர் தினத்திலேயே மரணித்தது ஒரு பாக்கியமே..!
  இரண்டு ஆண்டுகள் அவரோடு பயணித்த அந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என தோன்றுகிறது...
    சிறந்த நகைச்சுவையாளர்,ஆசிரியர்,குடும்ப தலைவர்,அறிவுரையாளர் என பன்முக சிறப்புக்களை கொண்ட மனிதர்...


    இன்றைய சூழலில் வாடகை வீட்டு முதலாளிகளை நேசிப்பது சற்று முடியாத சூழல்தான்.ஆனால் சற்று முரணாக இந்த வீட்டின் முதலாளிகள் சற்று வித்தியாசம்....
    என் இயல்பு மற்றோர் பேசுவதை கேட்டுவைத்துக்கொள்ளும் ஆசை எமக்கு நிறைய உண்டு.மாற்றார்க்கு தான் கற்றதை தன் இறுதிகாலத்திலும் கூட கற்றுக்கொடுக்கும் குணம் இவருக்கு...
இவை இரண்டுமே எங்களை பினைப்படைய செய்தது.தினமும் அவரோடு சில நிமிட உரையாடலே இருக்கும்(எனக்கு நேரம் அவ்வளவு தான் இருக்கும்),அதிலும் கூட பல அறிய தகவல்களை முன் வைத்து பேசுவார்.
    என்னோடு மட்டுமல்ல இந்த பகுதியில் அனைவரிடமும் அப்படித்தான் பேசுவார்.அதனாலயே அவர் வருவதைப்பார்த்தால் சிதறி ஓடுபவர்களும் உண்டு.ஒரு ஆசிரியரை பாரத்தால் யாருக்குத்தான் பயம் வராது..
   நான்தான்பற்றி சக ஒருவரிடம் கேட்டேன் அவர் கூறியது"அவர் எல்லாவற்றையும் விட நான்தான் பெரியவன் என்பது போல பேசுவார்"என சொன்னார்.
ஆனால் அவர் அவ்வாறு போசுவதற்கு வேறு காரணங்கள் உண்டு என்பதைதான் நான் உணரந்து கொண்டேன்..
தன் இறுதி காலம் உணர்ந்து தான் கற்றறிந்த விடயங்களையும் தன் அனுபவங்களையும் நமக்கு தெரியப்படுத்துவதற்காகத்தான் இருக்கும்.மேலும் அவர் ஆசிரியராக நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்கால சுடராக  இருந்த பெருமையும் கூட அவரை பேச வைத்திருக்கலாம்...
     அவரின் மதச்சார்பற்ற உணர்வும் மனிதநேயமான தன்மையும் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறது.பல நூறு அறிவுரைகளை தனிமையில் வழங்கியுள்ளார்.அந்த எண்ண அலைகள் என் நினைவில் வரும் போதெல்லாம் அவருக்காக ஒரு துளி கண்ணீர் எம் கண்ணில் கசியும்..
     அவரை சந்தித்தது அவரால் நான் சிந்தித்தது இவையாவும் இறைவனின் ஆணை.....
    அவரின் பூத உடலில் இருந்து புறப்பட்ட ஆன்மா இறைவனின் கருணை....

                                         இப்படிக்கு உங்கள் மாணவன் 

                                           தமிழன் வீரமணி